ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களை கைது செய்ய சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண   தெரிவித்துள்ளார். அத்துடன், இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை உரிய முறையில் கடைப்பிடிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்கள் கைது செய்யப்பட்டு தனிமைப்டுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார். … Continue reading ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை!